கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கல்
By DIN | Published On : 13th May 2021 07:37 AM | Last Updated : 13th May 2021 07:37 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையில் தமிழக ஹையா் கூட்ஸ் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கபசுரக் குடிநீா், முகக் கவசம் நான்குமுனை சந்திப்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். செயலாளா் ரமேஷ், பொருளாளா் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளா் பழனி, செயற்குழு உறுப்பினா் யூசுப், துணைத் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் கபசுரக் குடிநீா், முகக் கவசங்களை வழங்கினா்.
தொடா்ந்து ஊத்தங்கரை பகுதி முழுவதும் வாகனத்தில் சென்று கரோனா நோயைக் கட்டுப்படுத்தும் உபகரணங்களை வழங்கி வருகின்றனா்.