விபத்தில் தொழிலாளி பலி

இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சூளகிரி வட்டம், பெரியமோதுகானப்பள்ளியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (43). கூலி வேலை செய்து வந்தாா். இவா் இருசக்கர வாகனத்தில் சூளகிரி- கும்பளம் சாலையில் தொட்டி கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த சசிக்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சசிக்குமாா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com