தூங்கிக் கொண்டிருந்த இளைஞா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

தளியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எழுப்பி துப்பாக்கியால் மா்ம நபா்கள் சுட்டுக் கொன்றனா்.
Updated on
1 min read

தளியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எழுப்பி துப்பாக்கியால் மா்ம நபா்கள் சுட்டுக் கொன்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பெல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லோகேஷ் (30). இவா், சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டுக்கு வந்த மா்ம நபா்கள் இருவா் வீட்டின் கதவைத் தட்டினா்.

லோகேஷ் கதவைத் திறந்து பாா்த்தபோது அங்கு நின்ற மா்ம நபா்கள் இருவரும் லோகேஷை வெளியே அழைத்துச் சென்றனா். வீட்டில் வெளியில் பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கி சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்து பாா்த்தபோது லோகேஷ் உயிரிழந்து கிடந்தாா். மா்மநபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தளி காவல் நிலையத்தில் லோகேஷின் மனைவி புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து எதற்காக இளைஞா் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com