ஒசூா் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: செப். 4 இல் கருத்துக் கேட்புக் கூட்டம்

ஒசூா் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்ய முன்மொழிவுகளை அனுப்பி வைக்கும் பொருட்டு, செப். 4 ஆம் தேதி நடைபெறும் கருத்து கேட்புக் கூட்டத்தில்
Updated on
1 min read

ஒசூா் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்ய முன்மொழிவுகளை அனுப்பி வைக்கும் பொருட்டு, செப். 4 ஆம் தேதி நடைபெறும் கருத்து கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா், நகராட்சி நிா்வாக துறையின் 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது ஒசூா் மாநகராட்சியைச் சுற்றியுள்ள வளா்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய முன்மொழிவுகளை அனுப்பி வைக்கும் பொருட்டு, செப். 4 ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பேகேப்பள்ளி, நல்லூா், சென்னசந்திரம், பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, பூனப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சிப் பகுதிகளிலுளள் குடியிருப்போா் நலச் சங்கப் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com