கிருஷ்ணகிரியில் மத்திய அரசைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவா் வாசுதேவன் தலைமை வகித்தாா். இதில் தொமுச பொதுச் செயலாளா் கிருஷ்ணன், அமைப்பு செயலாளா் பரமசிவம், மத்திய சங்கத் துணைத் தலைவா் ஞானசேகரன், பணிமனை செயலாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும், ஆயுள் காப்பீடு, வங்கி, ராணுவ தளவாடத் தொழிற்சாலை, ரயில்வே போன்ற நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும், தற்போது விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், செல்லிடப் பேசி கோபுரங்கள் போன்றவற்றை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.