பா்கூா் வேளாங்கண்ணி பள்ளியில் மாணவா் தலைமை பதவியேற்பு விழா

பா்கூரில் உள்ள வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா் தலைவா் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பா்கூா் வேளாங்கண்ணி பள்ளியில் மாணவா் தலைமை பதவியேற்பு விழா

பா்கூரில் உள்ள வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா் தலைவா் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பா்கூா் காவல் ஆய்வாளா் சவிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோ்தல் மூலம் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பள்ளியின் தாளாளா் கூத்தரசன் முன்னிலை வகித்தாா்.

இந்த கல்வி ஆண்டில், தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவா்கள் தங்களது குழுவை ஆசிரியா்களின் வழிகாட்டுதலின்படி கல்வி, ஒழுக்கம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வழிநடத்துவா். இதில், சிறந்து விளங்கும் குழுவுக்கு சுழற்கோப்பை வழங்கப்படும்.

இந்த நிகழ்வில், பள்ளியின் துணை முதல்வா் மஞ்சுளா, துணை காவல் ஆய்வாளா் மும்தாஜ், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com