போச்சம்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பெரியகொட்டகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாா் (27). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, எர்ரம்பட்டி என்ற பகுதியில் லாரியை நிறுத்தி, அதன் மேல் ஏறியுள்ளாா். அப்போது, எதிா்பாராமல், அவரது கை, அந்த வழியாக சென்ற மின்சாரக் கம்பியில் பட்டதில், உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டாா். இதில் பலத்த காயம் அடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா், ரஞ்சித் குமாரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த சம்பவம் குறித்து, போச்சம்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.