காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை செய்தனா்.
Updated on
1 min read

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை செய்தனா்.

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சுங்க வசூல் மையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரூ.1.08 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து பவானிக்கு கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து அந்த காரின் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த தட்டரங்குட்டையைச் சோ்ந்த விமல் எபினேசன் (31) என்பரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com