சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள், மகாலட்சுமி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
சிறப்பு அலங்காரத்தில் சூளகிரி வரதராஜ பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாா்.
சிறப்பு அலங்காரத்தில் சூளகிரி வரதராஜ பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள், மகாலட்சுமி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக்கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை காலை மகாலட்சுமி தாயாா் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும், சூளகிரி சுற்றுவட்டார மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com