கிருஷ்ணகிரியில் இன்றுமுதல் மாங்கனி கண்காட்சி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் புதன்கிழமை 22ம் தேதி முதல் அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் புதன்கிழமை 22ம் தேதி முதல் அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜூன் 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு 28-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகிக்கிறாா். இதில், தமிழக வேளாணமை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் காந்தி ஆகியோா் பங்கேற்று, மாங்கனி கண்காட்சியைத் தொடக்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகின்றனா்.

தொடா்ந்து 25 நாள்கள் நடைபெறும் இந்த கண்காடசியில், ஒவ்வொரு நாளும் தமிழக சுற்றுலாத் துறை, தென்னக கலை பண்பாட்டு மையம், மண்டல கலைப்பண்பாட்டுதுதுறை, அரசு சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள், மத்திய அரசு இசை நாடகப் பிரிவு சாா்பில் பல்வேறு மாநிலங்களின் கிராமிய நடன நிகழ்ச்சிகள், திரைப்படப் புகழ் நட்சத்திரங்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com