மே 1 ஆம் தேதி மதுக்கடைகள் அடைப்பு

உலக தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்.

உலக தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003- 12-ஆவது விதியின்படி மே தினமான உலக தொழிலாளா் தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினங்களாக பின்பற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்காக உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் உணவகங்கள்அனைத்தும் மே 1-ஆம் தேதி அன்று அடைக்கப்படும்.

இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக் கடைகளைத் திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com