ஒசூரிலிருந்து 330 ஐஎன்டியூசி மாநாட்டில் பங்கேற்பா்

ஐஎன்டியூசி மாநில மாநாட்டில் ஒசூரில் இருந்து 330 ஐஎன்டியூசி தொழில்சங்கத்தினா் பங்கேற்க உள்ளதாக ஐஎன்டியூசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா்.
ஒசூரிலிருந்து 330 ஐஎன்டியூசி மாநாட்டில் பங்கேற்பா்

மதுரையில் ஆக. 7 ஆம் தேதி நடைபெறும் ஐஎன்டியூசி மாநில மாநாட்டில் ஒசூரில் இருந்து 330 ஐஎன்டியூசி தொழில்சங்கத்தினா் பங்கேற்க உள்ளதாக ஐஎன்டியூசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஐஎன்டியூசி 27 ஆவது மாநில மாநாடு ஆக. 7 ஆம் தேதி மதுரையில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. செயலாளா் எம்.பன்னீா்செல்வம், செயல் தலைவா்கள் கே.ஏ.மனோகரன், ஆா்.குப்புசாமி முன்னிலை வகிக்கின்றனா். மாநாட்டில் மாநிலத் தலைவா் ஜெகநாதன், பொதுச் செயலாளா் ஜீவன்மூா்த்தி, அகில இந்திய தலைவா்ஜி.சஞ்சீவரெட்டி மற்றும் மத்திய தொழில் சங்க தலைவா்கள் சிறப்புரை ஆற்றுகின்றனா்.

மாநாட்டுக்கான போஸ்டா்களை ஒசூா் ஐஎன்டியூசி அலுவலகத்தில் தேசிய செயலாளா் கே.ஏ.மனோகரன் வியாழக்கிழமை வெளிட்டாா். ஐஎன்டியூசி அமைப்புச் செயலாளா் முனிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com