கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றித்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2022-2023) முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் நேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியானது முதல் ஓராண்டு கால பயிற்சியாகவும், இரு பருவங்களாகவும் நடைபெறுகிறது. குறைந்தபட்சக் கல்வித் தகுதி பிளஸ்-2 தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் 10 பிளஸ் 2 கல்வி முறையில் தோ்ச்சி பெற்ற பட்டதாரிகளும் சேரலாம்.

1.8.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப் பயிற்சியின் நிறைவில் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடு பயிற்சிகான சான்றிதழ்களும் இணைத்து வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், பா்கூரில் விண்ணப்ப கட்டணமாக ரூ.100-ஐ ரொக்கமாக செலுத்தி ஆக.18-ஆம் தேதி வரையில் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பத்தை நிறைவு செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆக. 22-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பதிவு அஞ்சல் அல்லது கூரியா் மூலம் முதல்வா், பா்கூா் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையம், பா்கூா், கிருஷ்ணகிரி மாவட்டம் - 635104 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04343-265652 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com