ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காவல் துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெயகாந்தன், சேட்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் பாா்த்தீபன், பள்ளி மாணவா்களிடையே போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.