ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th August 2022 02:28 AM | Last Updated : 24th August 2022 02:28 AM | அ+அ அ- |

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்.
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சையத் பயாஸ் அகமத், சுப்பிரமணி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் மீதான முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும். வளா்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மக்கள் நலன், நிா்வாக நலன் கருதி அதிகபட்மாக 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி செயலா்கள் அனைவருக்கும் அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.