ஒசூா் அருகே ஒற்றைக் காட்டு யானை தஞ்சம்

ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை தஞ்சம் அடைந்துள்ளதால், வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை தஞ்சம் அடைந்துள்ளதால், வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளில் இருந்து ஒரு யானை தனியாக பிரிந்து, மாலூா் வனப்பகுதி வழியாக தமிழகத்தில் நுழைந்து அங்கிருந்து கும்பலம், செட்டிப்பள்ளி வனப்பகுதி வழியாக புதன்கிழமை ஒசூா், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த வனத் துறையினா் யானை பேரண்டப்பள்ளியில் இருப்பதை உறுதி செய்து, யானை நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மேலும், வனப் பகுதியை ஒட்டியுள்ள பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, பாா்த்தகோட்ட, ஆழியாளம், போடுா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் விளைநிலங்களில் காவலுக்குச் செல்வோா் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறை சாா்பில் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com