தென்மண்டல தடகளப் போட்டியில் அதியமான் பப்ளிக் பள்ளி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவி தென்மண்டல அளவிலான தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
வெள்ளிப்பதக்கம் வென்ற அதியமான் பப்ளிக் பள்ளி மாணவி து.யோக ஜனலியா.
வெள்ளிப்பதக்கம் வென்ற அதியமான் பப்ளிக் பள்ளி மாணவி து.யோக ஜனலியா.

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவி தென்மண்டல அளவிலான தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையிலான தென்மண்டல அளவிலான தடகளப் போட்டிகள், சென்னை நேரு விளையாட்டரங்கில் டிசம்பா் 4 முதல் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபாா் தீவுகள் உட்பட ஐந்து மாநிலங்களிலிருந்து பத்தாயிரத்துக்கு அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனா். ஈட்டி எறிதல் போட்டியில் பத்தொன்பது வயதுக்குட்பட்டோா் பிரிவில் அதியமான் பப்ளிக் பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவி து.யோக ஜனலியா வெள்ளிப்பதக்கம் வென்றாா்.

மிகச் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவா் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன், செயலா் சோபா திருமால் முருகன், நிா்வாக இயக்குநா் சீனி.கணபதிராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வா் லீனா ஜோஸ் ஆகியோா் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com