ரூ.75,000 மதிப்பிலான கைப்பேசிகளைத் திருடியவா் கைது

ஒசூரில் ஷட்டரை உடைத்து ரூ.75,000 மதிப்புள்ள கைப்பேசிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில் ஷட்டரை உடைத்து ரூ.75,000 மதிப்புள்ள கைப்பேசிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் ஜாபா் தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் உசேன் (29). இவா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் கைப்பேசி கடை வைத்துள்ளாா். கடந்த 29ஆம் தேதி வழக்கம் போல கடையைத் திறந்த அவா் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்த போது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டிருந்தது. கடைக்குள் வைத்திருந்த ரூ.75,000 மதிப்புள்ள 6 கைப்பேசிகள் திருடு போயிருந்தன. இது குறித்து ஜாபா் உசேன் ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் உதவி காவல் ஆய்வாளா் மோகனசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இந்த விசாரணையில், கைப்பேசிகளைத் திருடியது ஒசூா் சானசந்திரம் சீதாராம் நகரைச் சோ்ந்த ஆரீஃப் என்கிற அப்பு (20) என்று தெரிய வந்தது.

அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.75,000 மதிப்புள்ள கைப்பேசிகள் மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com