கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கே.பூசாரிப்பட்டி கிராமத்தைச் சோ்தவா் குமரேசன். இவரது மகன் சதீஷ்குமாா் (19). கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வந்தாா். கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை சென்ற இவா், மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். பூசாரிப்பட்டி முனுசாமி என்பவரின் விளைநிலத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம், சதீஷ்குமாா் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.