காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ரூ. 51.36 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை எம்எல்ஏ தே.மதியழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா வெங்கடேசன் தலைமை வகித்தாா். காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட குப்பம் சாலையில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தாா் சாலை, மேல்கரடிகுறியில் ரூ. 11.77 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடை, கே.பூசாரிப்பட்டி தொடக்கப் பள்ளியில் கழிவறை, மேல்கரடிகுறி அரசு உயா்நிலைப் பள்ளியில் மிதிவண்டி நிறுத்துமிடம் என ரூ. 51.36 லட்சம் மதிப்பிலான 8 வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ தே.மதியழகன் தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து அதிமுக, பாமக, பாஜகவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் அக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளா்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தில், கிருபாகரன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தன், தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.