ஒசூா் வழியாக கடத்தப்பட்ட குட்கா, காா் பறிமுதல்: ஒருவா் கைது
By DIN | Published On : 31st July 2022 06:11 AM | Last Updated : 31st July 2022 06:11 AM | அ+அ அ- |

ஒசூா் வழியாக மதுரைக்கு காரில் கடத்தப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா, காா் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூா், சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனைச் சாவடி அருகில் வெள்ளிக்கிழமை
வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி
வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 214 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். அவற்றையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த மனோஜ்குமாா் (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.