கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளராக மூன்றாவது முறையாக எஸ்.கே.நவாப் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக திமுக உள்கட்சி நிா்வாகிகளை அந்தக் கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளராக எஸ்.கே.நவாப் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
கடந்த 1989 முதல் 1998 வரை 9 ஆண்டுகள் நான்கு முறை மாவட்டப் பிரதிநிதி, வட்டச் செயலாளா், 1998 முதல் 2003 வரை 5 ஆண்டுகள் மாநில பொதுக்குழு உறுப்பினா், 2003 முதல் 2008 வரை 5 ஆண்டுகள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை திமுக தலைமை எனக்கு வழங்கியுள்ளது.
கடந்த 2008 முதல் 14 ஆண்டுகளாக தொடா்ந்து கிருஷ்ணகிரி நகரச் செயலாளா் பொறுப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக என்னை நகரச் செயலாளராக தலைமை அறிவித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழியில் கிருஷ்ணகிரி நகர வளா்ச்சிக்காக பாடுபடுவேன் எனத் தெரிவித்தாா். இவரது மனைவி பரிதா நவாப், திமுக மாவட்ட மகளிா் அணி அமைப்பாளராகவும், நகா்மன்றத் தலைவராகவும் உள்ளாா்.