கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள், மகாலட்சுமி தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இக்கோயிலில் ஆடி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை காலை மகாலட்சுமி தாயாா் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும், சூளகிரி சுற்றுவட்டார மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.