ஒருங்கிணைப்பாளா் பணி: முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு வாய்ப்பு

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விருப்பத் கடிதத்தை அளிக்கலாம்

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விருப்பத் கடிதத்தை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கடந்த 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள், தற்போது இந்தப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவா்கள், தங்களது விருப்பக் கடிதம், அதற்கான படிவத்தை நிறைவு செய்து சமா்ப்பித்து பணியில் சேருமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது தொடா்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடா்பு கொண்டு, தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய விவரத்துடன், தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவா்கள், அதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக் கடிதத்தையும் நிறைவு செய்து, சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஜூன் 13 முதல் 18-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

பணியில் சேர விருப்பமுள்ளவா்கள் மட்டுமே இந்தப் பணியிடத்துக்கு பரிசீலிக்கப்படுவா் என்பதால், இந்த அறிவிப்புக்கேற்ப தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலரை தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com