பராமரிப்பு பணிகளுக்காக இரு நாள்கள்கிருஷ்ணகிரி, ஒசூரில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மின்வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்க இயலாது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் தெரிவித்தார்.

மின்வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்க இயலாது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் சங்கரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தினசரி ஒகேனக்கல் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பாலக்கோடு, மூங்கில்பட்டி அருகில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்(என்எச் 844) மேம்பால பணிகளுக்காக 900 எம்.எம் இரும்பு குடிநீா் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகளும் இத்துடன் மேற்கொள்ள இருப்பதால் ஜூன் 15, 16 ஆகிய 2 நாள்கள் ஒனேக்கல் குடிநீா் வழங்க இயலாது.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் 2 நாள்களுக்கும் உள்ளூா் நீா் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com