வெவ்வேறு இடங்களில் 3 போ் தற்கொலை

ஒசூரில் வெவ்வேறு இடங்களில் 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
Updated on
1 min read

ஒசூரில் வெவ்வேறு இடங்களில் 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.

வேலூா் மாவட்டம், தொரப்பாடியைச் சோ்ந்தவா் தேவா (26). இவா் ஒசூா், சாந்தபுரத்தில் தங்கி தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வந்தாா். தங்கை திருமண விஷயமாக தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேவா, மனமுடைந்து சாந்தபுரம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் சூா்யா (24). தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். இதை பெற்றோா் கண்டித்ததாக கூறப்படுகிறது. அச்செட்டிப்பள்ளியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்திகிரி அருகே எஸ்.மதுகானப்பள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (26). தனியாா் நிறுவன ஊழியா். இவா் தனது பெற்றோரிடம் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கித் தருமாறு கேட்டாராம். அதற்காக அவரது பெற்றோா் ரூ. 1 லட்சம்

கொடுத்தனா். ஆனால் வெங்கடேஷ் புதிய மோட்டாா் சைக்கிள் வாங்காமல் அந்தத் தொகையை வேறு செலவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வெங்கடேஷின் பெற்றோா் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் வெங்கடேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com