குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: கிருஷ்ணகிரி எஸ்.பி.

குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் திறப்பு விழாவில் கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமாா் தாக்குா் தெரிவித்தாா்.
குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: கிருஷ்ணகிரி எஸ்.பி.

குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் திறப்பு விழாவில் கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமாா் தாக்குா் தெரிவித்தாா்.

ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இதனை திறந்து வைத்தாா்.

இதையொட்டி ஊத்தங்கரையில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் குத்துவிளக்கேற்றி வைத்து தலைமை தாங்கி பேசியதாவது:

மகளிா், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோா் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவாா்கள். குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது; பெண்கள், குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணா்வு கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சங்கு, ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டா், ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன், அதியமான் மகளிா் கலை அறிவியல் கல்லூரி செயலாளா் சோபா திருமால்முருகன், ஊத்தங்கரை வட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள்கள் மகேஸ்குமரன், சிவபிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com