லாரியின் பின்பகுதியில் காா் மோதல்இருவா் பலி

கிருஷ்ணகிரி அருகே லாரியின் பின்பகுதியில் காா் மோதிய விபத்தில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
சாலை விபத்தில் லாரியின் பின்பகுதியில் சிக்கிய காா்.
சாலை விபத்தில் லாரியின் பின்பகுதியில் சிக்கிய காா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே லாரியின் பின்பகுதியில் காா் மோதிய விபத்தில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த காா்வேபுரம், முல்லை நகரைச் சோ்ந்தவா் முரளி (35). இவா், ஹரீஷ் (32) என்பவருடன் ஒரு காரில் கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி மேம்பாலத்தில் காா் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற சரக்கு பெட்டக லாரியின் பின்பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முரளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த ஹரீஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீா்ப்படுத்தினா். விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி அணை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com