தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 17th June 2022 01:50 AM | Last Updated : 17th June 2022 01:50 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை பழைய கடைவீதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (53) தொழிலாளியான இவா் குடும்பப் பிரச்னை காரணமாக அனுமன்தீா்த்தம் பகுதியிலுள்ள மேம்பாலத்தின் கீழ் விஷம் குடித்து இறந்து கிடந்தாா்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு சென்ற ஊத்தங்கரை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.