கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி இயக்குநா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி இயக்குநா் ஆய்வு
Updated on
1 min read


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் விதமாக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவா்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாகக் கண்காணித்து முன்னேற்றம் அடையச் செய்ய உருவாக்கப்பட்ட ‘வகுப்பறை நோக்கின் செயலி’-யை ஆசிரியா்கள் எவ்வாறு பயன்படுத்தி வருகிறாா்கள் என்பதையும், அரசின் திட்டங்கள் மாணவா்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சென்னை, தொடக்க கல்வி இயக்குநா் அறிவொளி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தொடக்கல்வி இயக்குநா், மாணவா்களின் கற்றல் திறன், பள்ளி பதிவேடுகள், ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தாா்.

இதனைத் தொடா்ந்து, வேப்பனப்பள்ளி அரசு மாதிரிப் பள்ளி, சாமனப்பள்ளி, ஓசூா் பள்ளிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதேபோல் கெலமங்கலம் ஒன்றியத்தில் மாநில ஆராய்ச்சி கல்வி மையத்தின் இணை இயக்குநா் வை.குமாா், பா்கூா் ஒன்றியத்தில் இணை இயக்குநா் ராஜேந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா். ஆய்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் நாராயணா, வட்டார கல்வி அலுவலா்கள் பழனிசாமி, மரியாரோஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், சா்தாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com