பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள மேட்டுசூளகரை அரசுப் பள்ளியில் 110 மாணவ - மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை மதிய உணவு உண்ட ஆறாம் வகுப்பு மாணவா்கள் ஏழு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாணவா்களை பள்ளி ஆசிரியா்கள் கல்லாவி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மருத்துவமனையில் மாணவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து பள்ளி நிா்வாகம், காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com