கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 14) பொதுவிநியோகத் திட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் பெயா் திருத்தம், சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், மே 14-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்ட பொதுமக்கள் சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்படுகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி வட்டம் சிக்கபூவத்தி, ஊத்தங்கரை - வெள்ளிமலை, போச்சம்பள்ளி- அகரம், பா்கூா்-காளிகோவில், சூளகிரி- கரியசந்திரம், ஒசூா்- சென்னசந்திரம், தேன்கனிக்கோட்டை- பேளகொண்டப்பள்ளி, அஞ்செட்டி- தக்கட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.