கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் சாதனைகளை எடுத்து விளக்கிட ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை’ என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, மே 16-ஆம் தேதி ஊத்தங்கரையில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன், கவிஞா் பொ்னாட்ஷா, 17-ஆம் தேதி பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட போச்சம்பள்ளியில் முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமாா், ஆத்தூா் சபரி, 18-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் குடியாத்தம் குமரன், செங்கை தாமஸ் ஆகியோா் பேசுகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட நகர, பேரூா் கழகச் செயலாளா்கள் மேற்படி பொதுக் கூட்டங்களை சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.