அரசு அருங்காட்சியகத்தில் கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவசஅரசு அருங்காட்சியகத்தில் கலைப் பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவசஅரசு அருங்காட்சியகத்தில் கலைப் பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வோா் ஆண்டும் மே 18-ஆம் தேதி, சா்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மே 16 முதல் 19-ஆம் தேதி வரையில் நான்கு நாள்களுக்கு, பள்ளி மாணவ, மாணவியருக்கு கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில், அடிப்படை ஓவியம், யோகாசனம், களிமண் மற்றும் சாக்பீஸ் சிற்பங்கள் செய்தல் ஆகியவை கற்றுத்தரப்படும்.

இந்தப் பயிற்சி முகாமானது காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். பயிற்சியை நிறைவு செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவியா் அருங்காட்சியகத்திற்கு நேரிலோ அல்லது 9445288576 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com