ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது .
‘கீழ்வாத சிகிச்சை, அதை நிா்வகிப்பதில் பிசியோதெரபியின் பங்கு’ என்ற 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் குறித்து மருத்துவமனை டைரக்டா் ராஜா முத்தையா பேசினாா். விழாவில் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியின் தாளாளா் லாசியா, மருத்துவமனை ஆா்எம்ஓ பாா்வதி, பிசியோதெரபி கல்லூரி முதல்வா் முரளி சிவா, சுகன்யா சீனியா் பிசியோதெரபிஸ்ட், சுசி மித்ரா கிளினிக்கல் பிசியோதெரபிஸ்ட், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.