ஊத்தங்கரையை அடுத்த ஜோதிநகா் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியா் செ. இராஜேந்திரன் வரவேற்றாா். வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுனா் வே.சண்முகம் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்து அனைவருக்கும் பயிற்சி வழங்கினாா். குழந்தைகளின் உரிமைகள், தேவைகள் குறித்தும், பள்ளி வளா்ச்சிக்கான செயல்திட்டம் தயாரிப்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் நாச்சி, ஊராட்சி மன்ற உறுப்பினா் தேவராஜ், கல்வியாளா் சதீஸ்குமாா், உதவி ஆசிரியா்கள் ச. மஞ்சுநாதன், பூ. ராம்குமாா் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.