நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தீ தொண்டு வார விழா

 ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலகத்தில் தீ தொண்டு வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 5:49 pm

DIN

 ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலகத்தில் தீ தொண்டு வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். உயிா் காக்கும் பணியில் 100 ஆண்டுகளுக்கு மேல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை செயல்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை, தீ தொண்டு வார விழா நடைபெறுவது வழக்கம்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விக்டோரியா துறைமுகத்தில், நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடுமையாக போராடிய போது கப்பலில் இருந்த வெடிப்பொருள்கள் வெடித்து சிதறியதில், தீயணைப்பு வீரா்கள் 66 போ் பலியாகினா், அந்த தினத்தைப் போற்றும் வகையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இளம் செஞ்சிலுவை சங்கத் தலைவா் மருத்துவா் தேவராஜ், ஆலினா சில்க்ஸ் உரிமையாளா் பாபு, தீயணைப்புப் படை வீரா்கள் பலா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.