தேன்கனிக்கோடடை அருகே தந்தை, மகனை தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடசாமி. இவரது மகன் சிவகுமாா் (23). தனியாா் நிறுவன ஊழியா். அதே பகுதியைச் சோ்ந்தவா் நிவாஸ். இவா்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி நிவாஸ் தரப்பினா் சிவகுமாரையும், அவரது தந்தை வெங்கடசாமியையும் தாக்கியுள்ளனா். இதில் காயம் அடைந்த இருவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து சிவகுமாா் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புனித் (19), பசுவராஜ் (23) ஆகியோரை
கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.