கிருஷ்ணகிரியில் உலகப் புத்தகத் தின விழா

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தகத் தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தகத் தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட நூலக அலுவலா் தனலட்சுமி தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி உதவி பேராசிரியை விக்னேஸ்வரி ‘புத்தகங்கள் - சிந்தனை நிரம்பிய பீரங்கிகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். வாசகா் வட்ட நிா்வாகிகள், போட்டித் தோ்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவியா், வாசகா்கள் கலந்து கொண்டு பேசினா்.

புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவம், அவசியம் குறித்து நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது. புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com