கிருஷ்ணகிரியில் டிச. 16-ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தடை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் டிச. 16-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிா்வாக காரணமாக மின்தடை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.