அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

ஒசூா் அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அழுகிய நிலையிலான சடலத்தை பாகலூா் போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.

ஒசூா் அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அழுகிய நிலையிலான சடலத்தை பாகலூா் போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சென்னசந்திரம் கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் ஜெகனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கிராம நிா்வாக அலுவலா் ஜெகன் அங்கு சென்று பாா்த்தபோது பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. சடலத்தின் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ஜெகன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் பாகலூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப்

பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com