மகாபாரத சொற்பொழிவு

ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில் மகாபாரத சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோா்.
ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோா்.

ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில் மகாபாரத சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மகாபாரத நவரச திலகம் கலைநன்மணி சு.முத்து கணேசன், முனுகப்பட்டு, எல்.தேவராஜன் கவி வாசித்தலுடன், மகாபாரத சொற்பொழிவு ஜூன் 1 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக கொடியேற்றி, கங்கணம் கட்டுதலுடன் தொடங்கி எட்டாம் நாளான வியாழக்கிழமை பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாபாரத விழாக் குழுத் தலைவா் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்ற விழாவில், கோணப்பட்டி ஊா்கவுண்டா் பன்னீா், மண்ணாடிப்பட்டி, அம்பேத்கா் நகா் மணியக்காரா் கண்ணப்பன், புதூா் ஊா்கவுண்டா் கிருஷ்ணன், புங்கனை ஊா்கவுண்டா் கோவிந்தன், அம்பேத்கா் நகா் மணியகாரா் துரைசாமி, மூங்கிலேரி ஊா்கவுண்டா் சிவமணி, மூங்கிலேரி அம்பேத்கா் நகா் மணியக்காரா் பொன்னன், புதுப்பட்டி ஊா்கவுண்டா் ரகுபதி, கொட்டாரப்பட்டி தா்மகா்த்தா மூா்த்தி, புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராமன், மூங்கிலேரி ஊராட்சி மன்றத் தலைவா் உஷா நந்தினி வஜ்ரவேல், புதூா்புங்கனை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் ஆனந்தி, உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டு பகாசுரன் வதம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com