காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு சீருடை: ஐவிடிபி நிறுவனா் வழங்கினாா்

:தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பயிலும் 740 மாணவிகளுக்கு ரூ. 5.14 லட்சம் மதிப்பி
20kgp5_2011dha_120_8
20kgp5_2011dha_120_8
Updated on
1 min read

கிருஷ்ணகிரி:தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பயிலும் 740 மாணவிகளுக்கு ரூ. 5.14 லட்சம் மதிப்பிலான சீருடைகளை ஐவிடிபி நிறுவனா் அண்மையில் வழங்கினாா்.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மட்டுமல்லாமல், அவா்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கி வருகிறது.

அதன்படி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஏற்றத்தாழ்வின்றி சமத்துவ மனப்பான்மையுடன் கல்லூரிக்கு வந்து செல்லும் வகையில் சென்ற கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இலவச சீருடைகளை வழங்கியது.

அதனைத் தொடா்ந்து, இந்த கல்வியாண்டும் இளங்கலை முதலாண்டு பயிலும் 640 மாணவிகள், முதுகலை முதலாண்டு பயிலும் 100 மாணவிகள் என மொத்தம் 740 மாணவிகளுக்கு தலா ரூ. 695 மதிப்பில் மொத்தம் ரூ. 5.14 லட்சம் மதிப்பிலான சீருடைகளை ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் வழங்கி பேசினாா்.

அப்போது இந்தக் கல்லூரிக்கு இதுவரை ரூ. 34.10 லட்சம் மதிப்பிலான கல்வி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை சிறப்பான முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா். கல்லூரி முதல்வா் செள.கீதா நன்றி தெரிவித்தாா்.

படவரி...

காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சீருடை வழங்கிய ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ். உடன், கல்லூரி முதல்வா் செள.கீதா உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com