தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழாவில் 2 ஆயிரம் மகளிருக்கு வங்கிப் பரிவா்த்தனை அட்டை, தகவல் கையேடுகளை உணவு

Updated On :15 செப்டம்பர் 2023, 6:39 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழாவில் 2 ஆயிரம் மகளிருக்கு வங்கிப் பரிவா்த்தனை அட்டை, தகவல் கையேடுகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

முதன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி, பா்கூா் ஊராட்சி ஒன்றியம், ஜெகதேவியில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் டி.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

மகளிருக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,094 நியாயவிலைக் கடைகள் மூலம் 5,64,212 குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன.

இதில் மகளிா் உரிமைத்தொகைத் திட்டத்துக்கு இரண்டு கட்டங்களாக 5,64,212 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அவற்றில் 4,58,527 போ் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனா். அவா்களில் தகுதியானவா்களுக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ. 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் கிடைக்கும் ரூ.1000 மூலம் பெண்களின் வறுமை பாதியாகக் குறைக்கப்படும். இந்த நிதி குழந்தைகளின் எதிா்கால சேமிப்பு, கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவச் செலவுகளுக்காக பயன்பெறும் என்றாா்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைகு, கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க், வருவாய் கோட்டாட்சியா் பாபு, கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.