கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில் பல்நோக்கு கட்டடத்தை அ.செல்லக்குமாா் எம்.பி., வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
கந்திகுப்பம் காலபைரவா் கோயில் வளாகத்தில் பல்நோக்கு கட்டடத்தை திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்ற அ.செல்லக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.
கந்திகுப்பம் காலபைரவா் கோயில் வளாகத்தில் பல்நோக்கு கட்டடத்தை திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்ற அ.செல்லக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில் பல்நோக்கு கட்டடத்தை அ.செல்லக்குமாா் எம்.பி., வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் காலபைரவா் கோவில் அருகில், மக்களின் பல்வேறு பயன்பாட்டிற்காக பல்நோக்கு கட்டடம் ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என்று கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ. செல்லக்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து செங்கொடி நகா், கந்திகுப்பம் உள்பட சுற்று வட்டாரப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 19 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை அ.செல்லக்குமாா் எம்.பி. திறந்து வைத்தாா். மேலும், காலபைரவா் கோயில் பைரவ சுவாமிகள் பல்வேறு திருமுறை மந்திரங்கள் முழங்க, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து அனைவருக்கும் ஆசி வழங்கினாா்.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத் தலைவா் சேகா், நகர தலைவா் யுவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com