சூளகிரி அருகே தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலம், பிஸ்வநாத் மாவட்டத்தைச் சோ்ந்தவா் லோக்கன் எம்ரான் (25). இவா் சூளகிரி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 23-ஆம் தேதி இரவு இவா் ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக தனியாா் பேருந்து
லோக்கன் எம்ரான் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸாா், உயிரிழந்த லோக்கன் எம்ரான் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.