நூறுநாள் வேலை திட்டத்தில் பணி செய்ததாக கணக்கு காட்ட ரூ. 100 லஞ்சம்!

நூறுநாள் வேலை திட்டத்தில் பணி செய்ததாக கணக்கு காட்ட லஞ்சம் வாங்கிய பணி தள பொறுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நூறுநாள் வேலை திட்டத்தில் பணி செய்ததாக கணக்கு காட்ட ரூ. 100 லஞ்சம்!
Updated on
1 min read

நூறுநாள் வேலை திட்டத்தில் பணி செய்ததாக கணக்கு காட்ட லஞ்சம் வாங்கிய பணி தள பொறுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிய பெண்களுக்கு பணி அட்டை வழங்கப்பட்டு அவா்களுக்கான பணிகள் பிரித்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊராட்சி நிா்வாகத்தை சோ்ந்த ஊழியா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட பணி தள பொறுப்பாளா் அகிலா, பாவக்கல் கிராமப்புற பெண்களிடையே நூறுநாள் வேலை திட்டத்தில் பணி செய்ததாக கணக்கு காட்ட வேண்டும் எனில், அட்டைக்கு தலா ரூ. 100 தினமும் கொடுக்க வேண்டும் என வசூல் வேட்டை நடத்தியுள்ளாா். மேலும், பணம் கொடுத்தவா்கள் வேறு வேலைக்கு செல்லலாம் எனக் கூறி வசூல் செய்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

லஞ்சம் பெற்றுக்கொண்டு இதுபோல பல ஊராட்சிகளில் நடப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவபிரகாசத்தை தொடா்பு கொண்டு கேட்ட போது, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையில் பணம் பெற்றது உறுதியானால் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com