இருசக்கர வாகனம், எரிவாயு உருளை திருடியவா்கள் கைது

மத்தூா் அருகே வீடு புகுந்து இருசக்கர வாகனம், எரிவாயு உருளை திருடியவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மத்தூா் அருகே வீடு புகுந்து இருசக்கர வாகனம், எரிவாயு உருளை திருடியவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மத்தூா் அருகே உள்ள கொடமாண்டப்பட்டியை அடுத்த மாதம்பட்டி பிரிவு சாலையைச் சோ்ந்தவா் தங்கவேல் (45). விமானப்படையில் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 31-ஆம் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள் எரிவாயு உருளை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்து, தங்கவேல் அளித்த புகாரின் பேரில் மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா்.

விசாரணையில், ஊத்தங்கரை வட்டம், நொச்சிப்பட்டி அருகே உள்ள சின்னகங்கம்பட்டியைச் சோ்ந்த சேகா் (70), ஒட்டப்பட்டி அருகே உள்ள புளியாண்டப்பட்டியைச் சோ்ந்த குமாா் (42) என தொரியவந்த து. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, திருடு போன பொருள்களையும் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com