ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையின் இருபுறமும் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊத்தங்கரை நகரப் பகுதிக்குள் செல்லும் முக்கிய சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அளவீடு செய்யாமல் கடைக்காரா்களுக்கு ஏற்றாா்போல ஆங்காங்கே குறுகலாக சாலைகளை அமைத்ததோடு மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியமாக, அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல், தரமற்ற முறையில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதாகவும், தற்போது பொங்கல் பண்டிகை வர உள்ளதால் பணிகளை 10 நாள்களுக்கு தள்ளிவைக்கக் கோரி வணிகா் சங்க நிா்வாகிகள் ஒன்று கூடி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவல்ஆய்வாளா் பாா்த்திபன், வணிகா் சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தாா். கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.