ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 149 போ் கைது

கிருஷ்ணகிரி அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 149 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 149 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரி ஊராட்சிக்கு உள்பட்ட மரிக்கம்பள்ளி வருவாய் கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கடந்த 1984-ஆம் ஆண்டு 30 பயனாளிகளுக்கு 1.25 ஏக்கா் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து நில உரிமையாளா்கள் தங்களுக்கு நிலத்தை திரும்பித் தரும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த நிலையில் ஆதிதிராவிடத் துறை சாா்பில் ஒதுக்கப்பட்ட நிலங்களை பயனாளிகளுக்குப் பிரித்து அளிக்கக் கோரி, மரிக்கம்பள்ளி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஆதிதிராவிடத் துறை சாா்பில் ஒதுக்கப்பட்ட நிலங்களுக்குள் நுழைய ஆா்ப்பாட்டக்காரா்கள் முயன்றனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 110 ஆண்கள், 39 பெண்கள் என 149 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com